நச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா!
Recommended Video
சென்னை: ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு நங்கூரத்தை நச்சென இப்போது போட்டுள்ளார். இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது ஏன் பொன்.ராதா ரஜினியை அழைக்க வேண்டும்? எல்லாம் காரணமாகத்தான் என்கிறது அரசியல் வட்டாரம்!
ரஜினியின் அரசியல் வருகை குறித்து பலரும் பல கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்து விட்டனர். ரஜினி வந்தால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்கிறது அதிமுக.. "ரஜினி திமுகவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்க மாட்டேன்.. ஆனால் வந்தால் வரவேற்பேன்" என்கிறார் ஸ்டாலின்.
"இல்லை.. இல்லை.. ரஜினி தனி கட்சி தொடங்குவார், யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்" முந்திகொண்டு சொல்கிறார்கள் திருநாவுக்கரசு, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர்!
மு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...!
பாஜக
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பாஜக தரப்பு ரஜினியை கூப்பிட்டு கொண்டுதான் இருக்கிறது. அமித்ஷா அழைத்துவிட்டார்.. தமிழிசையும் அழைப்பு விடுத்தார்.. ஆனால் ரஜினி பக்கம் சத்தமே இல்லை. இந்நிலையில் ரஜினிக்கு கடிவாளம் போடும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
விருப்பம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களும் பாஜக-வில் சேர வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம். அதுபோல, ரஜினியும் பாஜகவில் இணைய வேண்டும்" என்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிடி தரவில்லை
ஏனெனில், மாநில பாஜக தலைமை பதவி காலியாக இருக்கிறது. அந்த இடத்தில் ரஜினியை அமரவைக்க தேசிய தலைமை முயற்சித்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்காக அமித்ஷா பல்வேறு வகைகளில் முயற்சித்து வருவதாகவும், ரஜினிதான் அதற்கு பிடிகொடுக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
தாமரை
பாஜக இந்த அளவு ரஜினியின் வருகையை எதிர்நோக்க காரணம், தமிழகத்தில் தாமரையின் மொட்டு கூட தென்படவில்லை. அந்த தாமரையை தேடி பிடித்து ரஜினி மலர வைப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அது மட்டுமில்லாமல், கருத்தியல் ரீதியாகவும் ஒத்துப்போவதால், உச்ச நட்சத்திரத்தை பயன்படுத்தி பாஜக அடித்தளமிட முயன்று வருகிறது. அதனால் பொன்.ராதா இப்படி ஒரு கடிவாளத்தை திரும்பவும் போட்டுள்ளார்.
வருவாரா?
இது எல்லாவற்றையும் விட கஜா புயல் நிவாரணத்தை ரஜினி இவ்வளவு நாள் இல்லாமல் கையில் எடுத்துள்ளதும் ஏன் என்று தெரியவில்லை.. எதுவும் விரைவில் தெரிந்துவிடும்!