பசுமை வழிச்சாலை எதிர்ப்பு: அதிகாரிகள் நட்ட கல்லை அகற்றி சேலம் பூலாவரி விவசாயிகள் போராட்டம்

அதிகாரிகள் நட்ட கல்லை அகற்றி சேலம் பூலாவரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை முயற்சி

    சேலம்: பசுமை வழிச்சாலை அமைக்க விளைநிலங்களில் அதிகாரிகள் நட்ட எல்லை கற்களை அகற்றி பூலாவரி கிராம விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், திட்டத்துக்கு நிலம் வழங்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றி, கிராம மக்கள் பலவகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    Poolavari farmers protested against the green express way project in Salem

    கடந்த வாரம்கூட, விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான பசுமை வழிச்சாலை திட்டத்தினை கைவிடாவிட்டால் தமிழக முதல்வர் வீடு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம் என பூலாவரி கிராம மக்கள் பகீர் அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தனர். ஆனாலும் தமிழக அரசு பசுமை வழிச்சாலை திட்டத்தினை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்காக விளைநிலங்களில் கற்களை நடும் பணிகளையும் தொடங்கியது. தங்கள் கண் முன்னாலேயே கற்கள் நடும் பணி நடைபெற்றதை கண்ட நில உரிமையாளர்களும், விவசாயிகளும் தங்கள் குடும்பத்தினருடன் தற்கொலை செய்யும் முயற்சியிலும்கூட இறங்கினர். ஒரு சிலர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர்.

    பூலாவரி கிராமத்தில் தொடர்ந்து 7 நாட்களாக கற்களை நடும் பணியானது இன்றுடன் முடிவடையும் நிலையிலும் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூலாவரி கிராம விவசாயிகள், அதிகாரிகள் ஒரு வார காலமாக நட்ட எல்லை கற்களை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+