பூவை மூர்த்தியின் 61வது பிறந்த நாள் விழா.. ஜெகன் மூர்த்தி மலர் அஞ்சலி
சென்னை: புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் டாக்டர் பூவை மு.மூர்த்தியின் 61-வது பிறந்த நாள் விழா நேற்று ஆண்டர்சன்பேட்டை இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
புரட்சி பாரதம் தலைவரும், பூவையாரின் அன்பு தம்பியுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி, பூவையாரின் சமாதியில் மலர்மாலை வைத்து வணங்கினார். பின்பு உக்கோட்டையில் உள்ள டாக்டர் பூவை மூர்த்தியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்தார்.

அங்கு பிரமாண்டமாக தயார்படுத்தப்பட்டிருந்த பூவை மூர்த்தியார் தேரினை, தலைவர் ஜெகன்மூர்த்தி துவக்கி வைத்தார். தேரினை உக்கோட்டையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து காலை 10.30 மணியளவில் உக்கோட்டையில் புறப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் டாக்டர் பூவை மூர்த்தியார் அவர்களின் சமாதியை வந்தடைந்தது.
விழாவில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு மலர்மாலை வைத்து வணங்கினார். பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது












Click it and Unblock the Notifications