போரூர் கட்டட உரிமையாளர் மதுரை மனோகரனுக்கு அரசியல் தொடர்பு?
சென்னை: சென்னை போரூரில் நடந்த 11 மாடிக் கட்டட விபத்தில் கைதாகியுள்ள கட்டட உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்துக் காமாட்சி உள்ளிட்ட 6 பேரும் 15 நாள் சிறைக் காவலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்தவரான மனோகரன் தனது மகன் முத்துக் காமாட்சியுடன் இணைந்து பிரைம் சிருஷ்டி பில்டர்ஸ் மூலம், இந்த போரூர் கட்டடத்தைக் கட்டி வந்தார்.
மொத்தம் 2 பிரிவுகளாக தலா 11 மாடிகளைக் கொண்டதாக இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டு வந்தது. முதல் பிரிவு முடிந்த நிலையில் 2வது பிரிவும் இறுதிக் கட்டத்தை அடைந்தபோதுதான் கட்டடம் விபத்துக்குள்ளாகி விட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மனோகரன், முத்துக் காமாட்சி, ஆர்க்கிடெக்ட் விஜய் பர்கோத்ரா, என்ஜீனியர்கள் துரைசிங்கம், சங்கர், கட்டட வரைபடத்தை தயாரித்த வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் சந்தோஷ் வீட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் 6 பேரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களைப் போலீஸார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, மனோகரனுக்கும், முக்கிய ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவருக்கும் இடையே தொழில் ரீதியாக தொடர்புகள் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications