ஓர் நற்செய்தி... 300 ரூபாய்க்கு உங்கள் புகைப்படம் ஸ்டாம்ப்பில் !
சென்னை: தற்போது, 'மை ஸ்டாம்ப்' என்கிற தலைப்பில், நீங்கள் விரும்பிய புகைப்படம் கொடுத்து, போஸ்ட் ஸ்டாம்பில் உங்கள் புகைப்படமோ அல்லது நீங்கள் விரும்பும் புகைப்படமோ பிரத்யேகமாக இடம்பெறவும் செய்யலாம்.
நவீன காலத்தில், கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டது. நலிவடைந்து வரும் தபால் துறையை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் தபால் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் 'மை ஸ்டாம்ப்' என்கிற தலைப்பில், விரும்பிய புகைப்படம் கொடுத்து தபால் தலைகளை பெற்றுக் கொள்ளலாம்' என தபால் துறை அறிவித்துள்ளது. போஸ்ட் ஸ்டாம்பில் உங்கள் புகைப்படமோ அல்லது நீங்கள் விரும்பும் புகைப்படமோ பிரத்யேகமாக இடம்பெறவும் செய்யலாம்.
இந்த திட்டத்தின்படி, 12 பிரத்யேக ஸ்டாம்புகளுக்கு வெறும் 300 ரூபாய்தான் கட்டணம் வசூலிக்கிறது இந்தியா போஸ்ட். இந்த திட்டத்தின் படி அவரவர் போட்டோக்களை எப்போதும் நினைவாக வைத்துக்கொள்ள முடியும்.
அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் தங்களது லோகோ, போட்டோவை பயன்படுத்தும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.12 லட்சம் கட்டி 60 ஆயிரம் ஸ்டாம்புகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.
http:www.epostoffice.gov.in வலைதளம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது.












Click it and Unblock the Notifications