முதல்வர் உறுதியளித்த பிறகும் தொடரும் மின்வெட்டு: அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: மின்தடை இருக்காது என்று அரசு அறிவித்த நிலையிலும், மின்வெட்டை தடுக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் அதிகாரிகள்.
தமிழகத்தில் அதிகப்படியான அளவு மின்வெட்டு நிலவுகிறது. மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். இந்நிலையில், அனல் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால், "ஜூன் 1ம்தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால் நடைமுறையில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில்கூட, இரவு 10:00 மணிக்கு மேல், மின்தடை செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், மீண்டும் தலை தூக்கியுள்ள மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண, தலைமை செயலகத்தில், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தலைமை செயலாளர், தமிழ்நாடு அரசின் ஆலோசகர், எரிசக்தி துறை செயலாளர், மின் வாரிய தலைவர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
"அனல் மற்றும் காற்றாலைகளில், மின் உற்பத்தி நன்கு உள்ளபோதிலும், மின் வினியோகம் செய்வதில் சிக்கல் காணப்படுகிறது. இந்த பிரச்னையை சமாளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications