24 மணிநேரத்தில் மின் இணைப்பு.. மின்தடை பற்றி முன்கூட்டியே எஸ்எம்எஸ்.. தங்கமணி அதிரடி
புதிய மின் இணைப்புகள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: புதிய மின் இணைப்புகள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் மின் தடை குறித்து ஒரு நாள் முன்கூட்டியே நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்றும் கூறினார்.
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மின்சார நண்பன்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மத்திய அரசின் மின்துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மின்நுகர்வோருக்கு அவர்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள, ஏற்பட உள்ள மின் பராமரிப்பு பணிகள் குறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.
தமிழகத்தில் மின் தடைகள் கிடையாது. 2 ஆண்டுகளாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் மின் நிலையங்களில் பாராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருசில டிரான்ஸ்பார்களில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் தடையை ஒன்றும் செய்ய முடியாது. 3000 மெகாவாட் மின்சாரம் உபரியாக உள்ளது.
கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தொடர்ந்து வைத்து வருகிறோம். மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் இணைப்புகள் வழங்கப்படும். "மின்சார நண்பன்" திட்டத்தின் படி மின் தடை குறித்து ஒரு நாள் முன்கூட்டியே நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications