மழைத் தூறல் ஆரம்பித்ததுமே ப்யூஸை பிடுங்கும் மின்வாரியம்!
சென்னை: முன்பெல்லாம் சென்னையில் மழைப் பெய்தால் அதை ரசித்து அனுபவித்து படமெடுத்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்வார்கள். அடடா மழைடா அடை மழைடா.. என சிச்சுவேஷன் பாட்டுப் பாடுவார்கள்.
டிசம்பர் பெருமழை வெள்ளத்துக்குப் பிறகு மழை என்றாலே அலற ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள். அனுபவம் அப்படி. இன்னொரு பக்கம் மின்சார வாரியத்தின் 'அட்ராசிட்டி'!

மழைத் தூறல் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் மின்சாரத்தை நிறுத்திவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக கோடையில் வெயில் உக்கிரமாக அடிக்கும் போது, மின்சாரத்தைத் துண்டித்துவிடுவார்கள். கேட்டால், ட்ரிப் ஆகுது... வெயில் அதிகமாவதால் அடிக்கடி இப்படி நடக்குது என்பார்கள் மின்வாரிய ஊழியர்கள்.
அதுவே மழை பெய்யும் நாட்களில் என்றால் வீக்கா இருந்த கேபிள்கள் வெடிச்சிடுச்சி... ட்ரான்ஸ்பார்மர்ல ட்ரிப் ஆகிடுச்சு என்று காரணம் கூறி நிறுத்திவிடுகிறார்கள்.
கடந்த இரு தினங்களாக மழை பெய்து வரும் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மின் துண்டிப்பு நிகழ்ந்தது. மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது மேலே படித்ததைத்தான் காரணங்களாக ஒப்பித்தார்கள்.
டிசம்பர் பெருமழை வெள்ளத்தின்போது புறநகர்களில் தொடர்ச்சியாக 5 முதல் 6 தினங்கள் வரை மின் இணைப்பு தரப்படவில்லை. அதன் பிறகு முழு வீச்சில் மின்தட பழுது பார்ப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் முழுமையாக நடக்கவில்லை. பழுதடைந்த பகுதிகளை மட்டும் சரி செய்த மின்வாரியம் வழக்கம் போல உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டது.
தொலை நோக்கோடு மின்கோபுரங்களை சீரமைத்தல், மின்மாற்றிகளைப் புதுப்பித்தல், கம்பிவடங்களைப் புதுப்பித்தல் பணிகளை மின்வாரியம் மேற்கொள்ளவில்லை. அதனால்தான் 5 மாதங்களுக்குள் மீண்டும் மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன, மின் மாற்றிகள் பழுதடைந்துள்ளன என்கிறார் ஒரு பொறியாளர்.
வேளச்சேரியில் கடந்த டிசம்பர் மழையின் போதுதான் மின்கம்பி அறுந்து விழுந்து தம்பதிகள் மரணமடைந்தனர். இந்த மழையின்போதும் அதே வேளச்சேரியில் மின்கம்பி அறுந்துவிழுந்து மேலும் ஒரு தம்பதி பலியான சோகம் நடந்துள்ளது.
மின்வாரியத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்கிறார்கள் வேளச்சேரி மக்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications