For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட்டை எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில ரஷ்ய நாட்டு உதவியுடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணுஉலை கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது.

 Power generation stopped 2nd reactor at Kudankulam

இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்தாண்டு ஜுன் மாதம் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு மீண்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் அணுஉலையில் எரிக்கப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் அகற்றப்பட்டு புதிய யுரேனியம் எரிப்பொருட்கள் நிரப்பப்பட உள்ளது.

இரண்டாவது அணுஉலையில் 500 மெகாவாட்டிலிருந்து 750 மெகாவாட்டாக மின்உற்பத்தி அதிகரிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவார ஆய்வுப் பணிக்கு பின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூடங்குளம் வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

English summary
Power generation stopped at Kudankulam 2 reactor due to Maintenance work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X