கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்
பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட்டை எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில ரஷ்ய நாட்டு உதவியுடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணுஉலை கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்தாண்டு ஜுன் மாதம் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு மீண்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் அணுஉலையில் எரிக்கப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் அகற்றப்பட்டு புதிய யுரேனியம் எரிப்பொருட்கள் நிரப்பப்பட உள்ளது.
இரண்டாவது அணுஉலையில் 500 மெகாவாட்டிலிருந்து 750 மெகாவாட்டாக மின்உற்பத்தி அதிகரிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவார ஆய்வுப் பணிக்கு பின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூடங்குளம் வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications