கருணாநிதி உடல் நலம் குறித்து குடியரசு தலைவர் விசாரணை - நலம் பெற வாழ்த்து
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி பற்றி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நலம் விசாரித்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக வியாழக்கிழமையன்று மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேற்று மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்து வந்தனர்.
இன்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, அதிமுக எம்.பி. தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று நேரில் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தொலைபேசி வாயிலாக ஸ்டாலினிடம் பேசினார். அப்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியதாகவும் திமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.