சங்கராச்சாரியார்கள் விடுதலைக்காக சங்கர மடக் கிளையில் 300 பேர் நடத்திய சிறப்பு பூஜை!
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவரும் விடுதலையாக வேண்டி, சென்னையில் நேற்று சங்கர மடக் கிளையில் 300 புரோகிதர்கள் இணைந்து சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தினர்.
சேத்துப்பட்டில் உள்ள சங்கர மடக் கிளையில் இந்த சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. சங்கரராமன் வழக்கில் சாதகமான தீர்ப்பு வர வேண்டி இந்த பூஜை நடத்தப்பட்டது. சங்கர மட பக்தர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இதுகுறித்து சங்கர மடத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் வலசை ஜெயராமன் கூறுகையில், 300 பேர் கலந்து கொண்டு ஸ்லோகம் முழங்கினர். மேலும் பல்வேறு மத வாசகங்களும் மொழியப்பட்டது. தீர்ப்பு சாதகமாக வர வேண்டி மட்டுமே இந்த பூஜை நடத்தப்பட்டது. மேலும் கோர்ட்டில் கூறப்படவுள்ள தீர்ப்பு குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டோம்.
நேற்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை இந்த பூஜையும், பிரார்த்தனையும் நடந்ததாம். மேலும் தமிழகம் முழுவதும் சங்கர மட பக்தர்கள் சார்பில் முக்கியக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications