For Daily Alerts
Just In
செவிலியர் பிரசவம் பார்த்து கர்ப்பிணி பலி... தருமபுரியில் பரிதாபம்
செவிலியர் பிரசவம் பார்த்ததால் தருமபுரியில் கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
பென்னாகரம்: தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு செவிலியர் பிரசவம் பார்த்ததால் அவர் உயிரிழந்துவிட்டார்.
அரசு மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் மகப்பேறு பிரிவுகளும் உள்ளன.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கிருஷ்ணம்மாள் (28) என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பென்னாகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. அச்சமயம் கிருஷ்ணம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செவிலியர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
இதையடுத்து அவர் உயிரிழந்துவிட்டார். இதனால் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியரே பிரசவம் பார்த்ததால்தான் அவர் இறந்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் கூறினர்.
Comments
English summary
A lady who was admitted in Dharmapuri Pennagaram Government Hospital was died because she was getting treatment by Nurse during Delivery.
Story first published: Sunday, October 15, 2017, 16:57 [IST]