For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவரின் தகாத உறவால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

தேனி: காவல்துறையில் பணிபுரியும் கணவரின் தகாத உறவால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி மாவட்டம் போடிநாயக்கனுரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் காவலராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவருக்கும் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த தேவிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த தேவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனிடையே இரவில் உறங்குவதற்காக சென்ற தேவி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

pregnant woman commited suicide in theni

தேவி எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது கணவருக்கும், செல்வக்கணி என்ற பெண்ணுக்கும் உள்ள தொடர்பு காரணமாக ஏற்கனவே குழந்தை இருப்பதாகவும், கணவர் வீட்டார் நகை, பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Pregnant woman commited suicide for her husband's extramarital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X