அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறிவிட்டார்: வேலூர் விஸ்வநாதன்
சென்னை: அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறியதால் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளதாக தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை அடுத்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சியை அகற்ற இந்த கட்சி பாடுபடும் என்றும் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறிவிட்டார். அதனால் தான் மக்கள் தேமுதிக கட்சி துவங்கப்பட்டுள்ளது. தேமுதிக பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் எங்கள் தலைகளை அடமானம் வைத்து பெரிய தொகையை வாங்கிவிட்டார்.
அவர் எங்களின் கனவுக் கோட்டையை தகர்த்துவிட்டார். நாங்கள் கட்சிக்கு துரோகம் செய்தோமா இல்லையே. கூட்டணி குறித்து தானே கேட்டோம். இத்தனை நாட்களாக மனக்கஷ்டத்தோடு இருந்தோம். பல நாட்கள் தூக்கமின்றி தவித்தோம் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications