குழந்தை பிறந்திருந்தால்தானே தெரியும்.. ஜெயலலிதா குறித்து பிரேமலதா படு மோசமாக விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் வேடலில் நடந்த தேமுதிக மாநாட்டின்போது நீண்ட உரையாற்றினார் பிரேமலதா விஜயகாந்த் தனது பேச்சின்போது அவர் தமிழக அமைச்சர்களை சரமாரியாக சாடினார். அடிமைகள் என்று அழுத்தம் திருத்தமாக பேசினார்.

Premalatha's pesonal attack on jayalalitha

மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நீயெல்லாம் மனுஷனா என்று காட்டமாக கேட்டார். யுபிஎஸ் என்றார்.

உச்சகட்டமாக முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சித்தார் பிரேமலதா. ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய அவர் உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும் என்று அவர் பேசியதுதான் உச்சகட்ட மோசமான பேச்சு.

தலைவர்கள் நிதானமாக பேசினால்தானே தொண்டர்கள் நிதானமாக இருப்பார்கள்.. இவரே இப்படியென்றால் அடுத்து விஜயகாந்த் பேசப் போகிறார்.. என்ன பேசுவாரோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+