கடம் வாங்க மானாமதுரை வரும் இளையராஜா, ரகுமான், டிரம்ஸ் சிவமணி!
மானாமதுரை: இந்தியாவிலேயே சிறந்த கடம் தயாரிப்பாளர் என மானாமதுரையைச் சேர்ந்த மீனாட்சியம்மாளுக்கு இந்திய அரசு அறிவித்து டெல்லியில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கையால் விருது பெற்றுள்ளார்.
இந்திய தேசிய சங்கீத அகாடமியின் தலைவர் லீலா சாம்சன் மானாமதுரை கடம் தேசிய அளவில் சிறந்த கடமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.
கர்நாடக இசைக்கலைஞர்கள் மானாமதுரை கடத்தை தான் தேர்வு செய்து கச்சேரிகளில் பயன்படுத்துவார்கள்.

இளையராஜா, ரகுமான்
இளையராஜா, ரகுமான், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் மானாமதுரை வந்து கடம் வாங்கி செல்வது வழக்கம்.

மானாமதுரை கடம்
மானாமதுரை கடத்திற்கு சிறந்த கடம் என விருது வழங்க வேண்டும் என பிரபல கடம் வித்வான் விநாயக்ராம், சுகன்யா உள்ளிட்டோர் குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து டெல்லி தேசிய சங்கீத அகாடமி சிறந்த கடம் தயாரிப்பாளர் என மானாமதுரையைச் சேர்ந்த மீனாட்சிஅம்மாளை தேர்வு செய்யப்பட்டார்.

மீனாட்சி அம்மாளுக்கு விருது
இதற்கான விழா இம்மாதம் 11ம் தேதி டெல்லியில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி தலைமையில் நடந்தது. அவ்விழாவில் ஜனாதிபதி விருதை வழங்கி கவுரவித்தார். ஓரு லட்ச ரூபாய் பணமுடிப்பும், தாமிர பட்டயமும் சான்றிதழ் ஆகியவற்றை மீனாட்சி அம்மாளுக்கு வழங்கினார்.

40 ஆண்டுகால தொழில்
கடந்த 40ஆண்டுகளாக கடம் தயாரித்து வரும் மீனாட்சி கூறுகையில், 15 வயதில் இருந்து கடம் தயாரிக்கிறேன், எனது மாமா, கணவர் வரிசையில் நாங்கள் கடம் தயாரிக்கிறோம்.

ஜனாதிபதியிடம் பாராட்டு
கர்நாடக இசையில் பங்கு பெறும் பெரும்பாலான கடங்கள் இங்கு தயாரானவைதான். இந்த விருதின் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். ஜனாதிபதி மிகவும் பாராட்டினார் என்றார்.

தேசிய சங்கீத அகாடமி
விழாவில் கலந்து கொள்ள மீனாட்சியம்மாள் மற்றும் ஒருவர் உடன் வரும் நபர் ஆகியோரின் அனைத்து செலவுகளையும் தேசிய சங்கீத் அகாடமியே செய்தது குறிப்பிடத்தக்கது.

மண்பாண்ட தொழிலாளர்கள் உற்சாகம்
சிறந்த கடம் தயாரிப்பாளர் விருது பெற்றிருப்பது மண் பாண்ட தொழிலாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications