சென்னை வந்தார் குடியரசு தலைவர்.. விமான நிலையத்தில் முதல்வர் வரவேற்பு.. முப்படை அணிவகுப்பு மரியாதை!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்ற குடியரசுத் தலைவர் ராமநாதசாமி கோவிலில் தனது மனைவி மற்றும் மகளுடன் சாமி தரிசனம
சென்னை: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தனது மனைவி மற்றும் மகளுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக கடந்த ஜூலை மாதம் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இந்நிலையில் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக இன்று தமிழகம் வந்துள்ளார்.
மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ராமநாதசாமி கோவிலில் தரிசனம்
மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார் குடியரசுத் தலைவர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குடியரசுத் தலைவர் தனது மனைவி மற்றும் மகளுடன் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

பாதுகாப்பு வளையத்தில்..
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடற்பகுதியும் கண்காணிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் வருகையால் ராமேஸ்வரம் பகுதி பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.

கலாம் நினைவிடத்தில் மரியாதை
இதைத்தொடர்ந்து பகல் ஒரு மணியளவில் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். அப்துல்கலாமின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர் நலம் விசாரித்தார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்தடைந்தார்.

முப்படைகளின் அணிவகுப்பு
சென்னை விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். குடியரசுத் தலைவரான பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ள ராம்நாத் கோவிந்துக்கு சென்னை விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந்தியன் என்ஜினியரிங் மாநாடு
மாலை சென்னை கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீரிங் மாநாட்டு நிறைவு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை அரசியல் பிரமுகர்களை சந்திக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications