கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார்.
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை சிறப்பு மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கோஷம்
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனைக்கு வெளியே திரண்டு நின்று பிரார்த்தனை செய்வதோடு, பூரண குணமடையவேண்டும் என்று கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

சக்கர நாற்காலியில் உட்கார்ந்தார்
இந்த நிலையில் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் கருணாநிதி நேற்று முன்தினம் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டார்.

ஊர் திரும்புகின்றனர்
இதனை அறிந்த தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதால் ஆஸ்பத்திரியின் வெளியே தொடர்ந்து காத்துக்கிடந்த தொண்டர்கள் ஏராளமானோர் தற்போது ஊர் திரும்பி வருகின்றனர்.

மருத்துவமனைக்கு வருகை
இதனால் காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர்.

விளக்கம்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி. உள்பட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் நலம் விசாரிக்க வருபவர்களுக்கு சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

சென்னை வருகிறார் ஜனாதிபதி
இந்நிலையில் நாளை ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவன பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி ராம்நாம் கோவிந்த் பிற்பகலில் சென்னை வருகிறார். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு செல்லும் அவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார்.
-
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications