பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

உலகையே ஒரு கூரைக்குள் கொண்டு வந்த பெருமைக்குரியது இண்டர்நெட் என்னும் இணையம். ஆனால், இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையானோர் அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் பயன் படுத்துகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் காலத்தை வீணடிப்பதற்கும் தங்கள் பிள்ளைகள் இது போன்ற சமூக வலைதளங்களைப் பயன் படுத்துகின்றனர் என்ற ஆதங்கம் அப்பிள்ளைகளின் பெற்றோருக்கு இருக்கத்தான் செய்கிறது.
ஆனால், பிள்ளைகளின் இது போன்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்த நினைத்தால், அவர்கள் எடுக்கும் முடிவுகள் விபரீதமாக முடிந்து விடுகிறது.
மஹாராஷ்டிராவில் பர்பானி என்ற இடத்தில் வசித்து வருபவர் சுனில் தஹிவால். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் அடிக்கடி தன்னுடைய செல்போன் மூலமும், இணையதளத்தின் பேஸ்புக் தொடர்பு மூலமும் நண்பர்களுடன் அரட்டை அடித்து வந்துள்ளார். இதனால் மகளின் படிப்பு பாழாகுமே என அஞ்சிய பெற்றோர் அதனைக் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதனன்று இரவும் ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதனைக் கண்ட பெற்றோர் வழக்கம்போல கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பெற்றோர் தன்னை சுதந்திரமாக இயங்க விட மாட்டேன் என்கிறார்களே என மனமுடைந்த ஐஸ்வர்யா, ‘இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால் இருக்கமுடியாது' என ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டர். இது குறித்து பர்பானி பகுதியில் உள்ள நனல்பெத் காவல்நிலையத்தின் புலனாய்வு அதிகாரியான ஜி.எச்.லெம்குடே கூரும் போது, ‘பெற்றோர்கள் தங்களுடைய மகளின் மேல்கொண்ட அக்கறையினால் கூறியதற்கு நடந்துள்ள விபரீதம்' எனக் குறிப்பிட்டிள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications