மாணவியை கர்ப்பமாக்கி கர்ப்பத்தைக் கலைத்த பாதிரியார் - போலீஸார் வழக்கு

நெல்லை பேட்டையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பங்குத்தந்தையாக கடந்த 2010 ம் ஆண்டுமுதல் புளியம்பட்டியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த சர்ச்சை ஒட்டி புனித அந்தோணியார் ஆலயத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட உயர் நிலைப் பள்ளி ஒன்றும் உள்ளது. இப்பள்ளிக்கு பங்குத்தந்தை செல்வன் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த சர்ச்சுக்கு வருவது வழக்கம். அப்படி வருபவர்களுக்கு பங்குத் தந்தை செல்வன் கிறிஸ்தவ பாடல்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம். அதே பகுதியை சார்ந்த ஒரு கூலித் தொழிலாளியின் பிளஸ் ஒன் படிக்கும் மகள் ரோஸ்லிக்கும் ஞாயிற்றுக்கிழமையில் பங்குத் தந்தை செல்வன் கிறிஸ்தவ பாடல்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம்.
சில நேரங்களில் மாலையில் பாட்டு சொல்லிக் கொடுப்பதாக கூறி மாணவியை தனது பங்களாவுக்கு அழைத்துசென்று மாணவியிடம் தவறாகப் பழகியுள்ளார் செல்வன் என்று கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பமானார். 4 மாத கர்ப்பமான நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்குதான் மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், பங்குத் தந்தை செல்வனிடம் போய் நியாயம் கேட்கவே அவர் கருவை கலைத்து விடுங்கள் தேவையான செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினாராம். இதையடுத்து பந்குத்தந்தையின் சொல்படியே மனைவியை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஒருவாரம் தங்க வைத்து கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இந்த தகவல் சர்சுக்கு வரும் மக்களுக்கு தெரியவரவே அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் பாதிரியார், கருக்கலைப்பு செய்த மருத்துவர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து பாதிரியாரும், மருத்துவரும் தலைமறைவாகி விட்டனர்.












Click it and Unblock the Notifications