அர்ச்சகர்கள் தெய்வீகமாக பூஜை செய்யவில்லை.. ரோபோக்கள் போல் செயல்படுகின்றனர்.. ஹைகோர்ட் வேதனை!
அர்ச்சகர்கள் ரோபோக்கள் போல் பணியாற்றுகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை: அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றாமல் ரோபோக்கள் போல் பணியாற்றுகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை மாயம் என மனு அளிக்கப்பட்டது. வாயில் பூவுடன் கூடிய மயில் சிலைக்கு பதில், பாம்புடன் உள்ள சிலை வைக்கப்பட்டது.
சிலை மாறியது தொடர்பாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டது.

சிலை மாயம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னை வனநாதர் சன்னதியில் காணாமல் போன மயில் சிலைக்கு பதில் புதிய சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

அர்ச்சகர்களுக்கு பொறுப்புண்டு
இந்நிலையில் சிலை மாயமானது தொடர்பான பொதுநல வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தெய்வீக பணிகள்
இந்த வழக்கில் சிலை மாறியிருப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வது அர்ச்சகரின் கடமை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர்கள் தெய்வீக பணிகளை சரியாக ஆற்ற வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ரோபோக்கள் போல்
அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றாமல் ரோபோக்கள் போல் பணியாற்றுகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

4 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு
அறநிலையத்துறை அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications