ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்ள புதுவை வந்துள்ள பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு
ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை
புதுச்சேரி : ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா ஆண்டிற்கு கலந்துகொள்வதற்காக புதுவை வந்துள்ள பிரதமர் மோடி, அங்குள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வசித்து வரும் ஆரோவில் நகரம் உருவாகி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது.

இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் 200க்கும் மேற்பட்டோர் குடும்பமாக வசித்து வருகின்றனர். ஆரோவில் நிர்வாகம் சார்பில் இந்த நகரத்தின் பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் காலை 10.30 மணியளவில் புதுவை வந்தடைந்தார்.
அங்கிருந்து, கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, சிறிது நேரம் அங்குள்ள அரவிந்தர் சமாதிக்கு முன் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பள்ளிக்குழந்தைகளுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு ஆரோவில் புறப்பட்டுச்சென்றார்.
ஆரோவிலில் உள்ள பாரத் நிவாஸ் கருத்தரங்க கூடத்தில் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியோடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
பிரதமரின் வருகையையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸாருடன் 4 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications