ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்ள புதுவை வந்துள்ள பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு
ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை
புதுச்சேரி : ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா ஆண்டிற்கு கலந்துகொள்வதற்காக புதுவை வந்துள்ள பிரதமர் மோடி, அங்குள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வசித்து வரும் ஆரோவில் நகரம் உருவாகி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது.

இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் 200க்கும் மேற்பட்டோர் குடும்பமாக வசித்து வருகின்றனர். ஆரோவில் நிர்வாகம் சார்பில் இந்த நகரத்தின் பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் காலை 10.30 மணியளவில் புதுவை வந்தடைந்தார்.
அங்கிருந்து, கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, சிறிது நேரம் அங்குள்ள அரவிந்தர் சமாதிக்கு முன் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பள்ளிக்குழந்தைகளுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு ஆரோவில் புறப்பட்டுச்சென்றார்.
ஆரோவிலில் உள்ள பாரத் நிவாஸ் கருத்தரங்க கூடத்தில் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியோடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
பிரதமரின் வருகையையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸாருடன் 4 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications