புழல் சிறையில் தொடரும் வினோத தற்கொலைகள்... ஊசியை விழுங்கிய கைதி மரணம்!
சென்னை புழல் சிறையில் ஊசியை விழுங்கிய கைதி பரிதாபமாக உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புழல் சிறையில் சமீப காலமாக வித்தியாசமான தற்கொலைகள் நடக்க ஆரம்பித்துள்ளன. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

பின்னர் அதேபோல இன்னொரு கைதியும் தற்கொலைக்கு முயற்சித்து பின்னர் காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஊசியை விழுங்கி ஒரு கைதி தற்கொலை செய்துள்ளார்.
அப்பு என்ற கைதி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 3ம் தேதி ஊசியை விழுங்கி விட்டார். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அப்பு இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications