சென்னை புழல் சிறையில் கைதி தற்கொலை - 700 கைதிகள் உண்ணாவிரதம்!
சென்னை: சென்னை மத்திய புழல் சிறையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மதிவண்ணன் என்கிற ஆயுள் கைதி சிறை அதிகாரி முன்பு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதால் 700க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதிவண்ணன் என்ற கைதி 12 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் சிறைத்துறையும் அரசும் தன்னை விடுதலை செய்யவில்லை என்பதால் மன உளைச்சலால் இன்று அதிகாலை தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்தும் மனம் திருந்தி சமூகத்தில் சாதாரண மனிதர்களை போல் வாழ்வதற்கான உரிமையை மறுக்கும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் சிறைத்துறை மட்டும் தமிழக அரசின் மெத்தனப்போக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என்றும் வேறு யாரும் காரணமில்லை என்று எழுதிவைத்துள்ளார்.
12 ஆண்டுகள் தண்டனை முடித்த கைதிகளை விடுதலை செய்யவேண்டும். மதிவண்ணன் எழுதிவைத்த கடிதம் வெளியிடப்படவேண்டும் தமிழக முதல்வர் அக்கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புழல் சிறைவாசிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மதி எழதிவைத்த கடிதத்தை சிறை கண்காணிப்பாளர் கைப்பற்றிவிட்டார். அதனால் நீதி கேட்டு சிறையில் உள்ள 700க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications