கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை.. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்
இன்று அதிகாலை ராஜமாணிக்கம் என்ற கைதி, கடலூர் மத்திய சிறை வளாகத்திற்குள் கைலியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கொலை வழக்கு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ராஜமாணிக்கம் கடலூர் மத்திய சிறை வளாகத்திற்குள் கைலியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய சிறைச்சாலைக்குள் கைதி தற்கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications