சிறையில் கைதி தூக்குப் போட்டு தற்கொலை… சேலத்தில் பரபரப்பு
சேலம் சிறையில் கைதி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மத்திய சிறையில் இருந்த கைதி அஜித் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார். 23 வயதான இவர் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று அவர் திடீரென தான் இருந்த சிறை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதில் அஜீத் குமார் பரிதாபமாக உயிர் இழந்தார்.
சிறைக் கைதி ஒருவர் சிறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications