சூப்பர்வைசர் பணியில் சேர நீதிபதிக்கே அழைப்பு கடிதம்... வாலண்டியராக சிக்கிய போலி நிறுவனங்கள்!
சூப்பர்வைசர் பணியில் சேர சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பிய போலி நிறுவனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன.
சென்னை : சூப்பர்வைசர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்க முன்தொகை அனுப்பக் கோரி நீதிபதிக்கே அழைப்புக் கடிதம் அனுப்பிய தனியார் நிறுவனங்கள் பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு உடனடி வேலைவாய்ப்பு என்று கூறி நிரந்த முகவரி கூட இல்லாத 5 தனியார் மனிதவள நிறுவனங்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அக்டோபர் 1ம் தேதி முதல் 3ம் தேதிக்குள் நேர்காணலுக்கு வருமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
நீதிபதி வைத்தியநாதன் இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கவனத்துக்கு கொண்டு சென்றார். இதனையடுத்து வழக்கு விடுமுறை நாளான நேற்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எப்படி முகவரி கிடைத்தது?
இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதியின் வில்லிவாக்கம் முகவரி எப்படி தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்தன என்று கேள்வி எழுப்பினர். மேலும் அழைப்புக் கடிதத்தில் உள்ள எண்கள் சம்பந்தப்பட்டவர்களுடையது அல்ல என்பது தெரியவந்துள்ளது.

எத்தனை பேரிடம் பணம் வசூலிப்பு?
அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ள 5 தனியார் நிறுவனங்களும் மோசடி நிறுவனங்கள் என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் பணியாளர் தேர்வில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக முறையே ரூ. 250 முதல் ரூ. 750 வரை வரைவு காசோலையாக அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளன.

எத்தனை பேர் ஏமாந்துள்ளனர்?
இந்தத் தகவல்களைப் பார்க்கும் போது இவை போலியானவை என்பது தெரிய வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த போலி நிறுவனங்கள் இது வரை எத்தனை நபர்களுக்கு இது போன்று அழைப்பு கடிதங்களை அனுப்பியுள்ளன, எத்தனை நபர்கள் பங்கேற்றுளனர், அவர்களிடம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரிக்க உத்தரவு
மேலும் மத்திய மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ லட்சினை இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்றும் விசாரிக்குமாறு காவல்துறை மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் 5 தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

விசாரணை மாற்றம்
இதனிடையே போலி தனியார் நிறுவனங்கள் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணை காவல்துறையிடம் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications