”அம்மானா சும்மா இல்லைடா” பேராசிரியர் க.பொன்னுச்சாமி உருக்கம்
மணப்பாறை: ஒரு தாயைப் போன்ற மனதுடன் என்னை கட்சியில் சேர்த்துக்கொண்ட அன்புத்தாயை வணங்குகின்றேன் என்று பேராசிரியர் க.பொன்னுச்சாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் க.பொன்னுச்சாமி தமிழக சட்டமன்ற அமைச்சராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.மேலும்,தமிழக கல்வி அமைச்சராக 3 ஆண்டுகள் இருந்துள்ளார்.
இப்படி கட்சியில் பல்வேறு உயரிய பொறுப்புகளில் பணியாற்றிய பொன்னுச்சாமி திடீரென்று கட்சியில் இருந்து விலகி வேறுகட்சிகளில் பணியாற்ற துவங்கினார்.
தற்போது மீண்டும் தன்னை அதிமுக கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி அதிமுக பொதுசெயலாளர் மற்றும் முதல்வரான ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதனை ஏற்று அவரை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்டுள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான நமது எம்.ஜி.ஆரில் முன்னாள் அமைச்சர்கள் திருச்சி நல்லுசாமி, பேராசிரியர் க.பொன்னுசாமி, தொட்டியம் முன்னாள் எம்.எல்.ஏ காத்தமுத்து ஆகியோர் தங்கள் செயலுக்கு கடிதம் மூலம் மன்னிப்புக்கோரி இருக்கின்றனர்.
அவர்கள் தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் இன்று முதல் கழகத்தில் இணைந்து பணியாற்றி அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications