தங்கச்சி மடத்தில் 3வது நாளாக போராட்டம் - பிரிட்ஜோ உடலை வாங்க மறுப்பு
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என கூறி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் 3வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என கூறி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் 3வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சி மடம், மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ கடந்த திங்கட்கிழமையன்று சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றார். தனுஷ்கோடி, ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 22 வயதான பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சில மீனவர்கள் காயமடைந்தனர்.

இலங்கை கடற்படை அட்டகாசம்
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின்போது பிரிட்ஜோவின் உடலில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. இலங்கை கடற்படையினர் அட்டகாசம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரிட்ஜோவை சுட்டுக்கொல்லும் முன் படகை நோக்கி 7 முறை சுடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி துப்பாக்கி குண்டு தனியார் குற்றயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்
இதனையடுத்து, மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அரசியல் கட்சித்தலைவர்கள் வைகோ, திருநாவுக்கரசர் ஆகியோர் நேரில் சென்று பிரிட்ஜோவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மீனவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

உடலை வாங்க மறுப்பு
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என கூறி உறவினர்களும், பொதுமக்களும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையையும் வாங்க மறுத்து விட்டனர்.

மூன்றாவது நாளாக நீடிப்பு
சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களாக மீனவர்கள் வேலைக்கும் செல்லாமல் இறந்த மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்காமல் தங்கச்சி மடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications