திமுகவை ஆதரித்து ஏற்காட்டில் பிரசாரம் செய்வேன்.. டாக்டர் கிருஷ்ணசாமி
குற்றாலம்: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரு தொகுதிகளில் வென்ற கட்சி புதிய தமிழகம். ஆனால் அதன் தலைவர் கிருஷ்ணசாமிக்கும், அதிமுக மேலிடத்திற்கும் ஒத்துப் போகவில்லை. எனவே அவர் மட்டும் தனித்து செயல்பட்டு வருகிறார். அவரது கட்சியின் இன்னொரு எம்.எல்.ஏவான நிலக்கோட்டை ராமசாமி அதிமுகவுடன் அணுசரணையாக இருக்கிறார்.
இந்த நிலையில் ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து குற்றாலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பரமக்குடி சம்பவம் தொடர்பாக நீதிபதி சம்பத் விசாரணை அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 30ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு என கருணாநிதியிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் அடுத்த இம்மாத இறுதியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
புளியரை பகுதியில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஈத்தல் தொழில் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அத்தொழிலை முடக்கும் வகையில் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைத்திட வேண்டுமென கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி, தென்காசி பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே தென்காசி தனிமாவட்டம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுஒழிப்பு, புதிய தொழில், இளைஞர் எழுச்சி என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழி...தமிழா, எழு தமிழா என்ற கோரிக்கையினை முன்வைத்து 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் கிராமங்கள் தோறும் டிசம்பர் 3ம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் அவர்.
-
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!












Click it and Unblock the Notifications