For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூவத்தூர் ரிசார்ட் பகுதிக்கு செல்பவர்களை அடித்து விரட்டும் மன்னார்குடி கும்பல்... மக்கள் ஷாக்!

எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள ரிசார்ட் பகுதிக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தி மன்னார்குடி கோஷ்டி விரட்டியடிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட் பகுதியில் செல்ல பொது மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்பவர்களை மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வராகியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியினர் அதிமுக எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்தில் வைத்து கடத்திச் சென்றனர். அவர்களை நேற்றிரவு முதல் மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

Public are restricted to the koovathoor resort area

எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்க மன்னார்குடி கும்பல் தடை விதித்துள்ளது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அந்த கும்பல் அடியாட்களை இறக்கியுள்ளது.

அவர்கள் ரிசார்ட் பகுதி வழியாக மற்ற வாகனங்கள் செல்வதை தடுத்து வருகின்றனர். ரிசார்ட் பகுதியாக அன்றாடப் பணிக்கு செல்லூம் மக்களைக் கூட விடாமல் மன்னார்குடியில் இருந்து குவிந்துள்ள அடியாட்கள் தடுத்து அவர்களை அடித்து விரட்டி வருகின்றனர்.

மன்னார்குடி கும்பல் செய்யும் அராஜகத்தால் கூவத்தூர் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்குடி கும்பலின் நடவடிக்கை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
MLAs jailed in kuvattur resort by the mannarkudi team. Public are restricted to the koovathoor resort area. Mannarkudi gang members beat the public and traced away from the area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X