பொருட்காட்சி அனுமதியில் முறைகேடு: நெல்லையில் பெண் பி.ஆர்.ஓ.,சஸ்பெண்ட்
நெல்லை மாவட்ட மக்கள் செய்தி தொடர்புத் துறை அலுவலர் ஆறுமுகச்செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை: திருநெல்வேலியில் தனியார் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கிய சர்ச்சையில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆறுமுக செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் ஆகியுள்ள பி.ஆர்.ஓ.,ஆறுமுகசெல்வி, விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின்
பேத்தியாவார்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் செயல்படுகிறார். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், புளியங்குடி
ஆகிய இடங்களில் தனியார் பொருட்காட்சிகள் அமைக்க இவரிடம் அனுமதி கோரி விண்ணப்பம் வந்தது.
ராட்டினம் போன்றவை இயக்குவதில் பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக அதற்கு அனுமதி மறுத்து கலெக்டர்
உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் பொருட்காட்சிகள் நடத்துவது செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் வருவதால், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியான ஆறுமுக செல்வி அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்தினார். அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்தது. எனவே பி.ஆர்.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கு முன்பு பி.ஆர்.ஓ.,வாக இருந்த அண்ணா என்பவர், கலெக்டருடன் மோதல் போக்கை கடைபிடித்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி நெல்லை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். தற்போது சஸ்பெண்ட் ஆகியுள்ள பி.ஆர்.ஓ.,ஆறுமுகசெல்வி, விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பேத்தியாவார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications