சென்னை அருகே திருநின்றவூரில் இன்னும் வடியாத வெள்ள நீர்... கண்ணீரில் மிதக்கும் மக்கள்
சென்னை: சென்னைக்கு அருகே திருநின்றவூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல், தெருக்கள் மற்றும் வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக மழை தந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.
குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து விட்டதால், மக்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

திருநின்றவூர்...
இந்த சூழ்நிலையில், சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளில் வசிக்க முடியாமல் இப்பகுதி மக்கள் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.

தூர்வாரப்படாத ஏரி...
வீடுகள் மற்றும் தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் நிற்பதால், பலர் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏரிகள் தூர்வாரப் படாததும், தண்ணீர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகளுமே வெள்ள நீர் இன்னும் வடியாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

நடவடிக்கை தேவை...
இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வராத தங்களுக்கு உணவைத் தவிர வேறு நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை வடியச் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை ஆகும்.

நோய் பரவும் அபயாம்...
தற்போது வெள்ள நீருடன், கழிவுநீரும் கலந்துள்ளதால் பல நோய்கள் பரவி வரும் அபாயமும் இப்பகுதியில் உள்ளது. முக்கியமாக அதிகளவு கொசுக்கள் உற்பத்தி ஆவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பெரிய ஏரி...
திருநின்றவூர் பெரிய ஏரியானது சுமார் 800 ஏக்கர் பரப்பளவையும், மீன் வளத்தையும் கொண்டது. இந்த ஏரியின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த பெரிய ஏரியானது முழுக் கொள்ளளவையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடித் தொழில்...
இந்த ஏரியில் மீன்பிடித் தொழில் நடந்து வருகிறது. அதனாலேயே ஏரி தண்ணீரை வெளியே போக விடாமல் சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications