புதுச்சேரி மாஜி அமைச்சர் விஎம்சி சிவகுமார் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி படுகொலை!
புதுவையில் முன்னாள் அமைச்சர் விஎம்சி சிவகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த இவர் பின்னர் அதிமுகவில் இணைந்தார்.
புதுவை: புதுச்சேரி முன்னாள் திமுக அமைச்சரும் தற்போது அதிமுக நிர்வாகியுமான விஎம்சி சிவகுமார் இன்று அடையாளம் தெரியாத வெடிகுண்டு வீசியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் புதுவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் சிவகுமார். புதுவை சட்டசபை சபாநாயகராகவும் சிவகுமார் பணியாற்றினார்.

கடந்த ஆண்டு ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்த சிவகுமார் ஆதரவு தந்தார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து சிவகுமார் அதிமுகவில் இணைந்தார்.
காரைக்காலுக்குட்பட்ட நீராவி என்ற இடத்தில் இன்று தாம் கட்டி வரும் திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளைப் பார்க்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சிவகுமார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் நிலைகுலைந்த சிவகுமாரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இச்சம்பவத்தால் புதுவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications