For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரண்பேடி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்.. புதுவை முதல்வர் நாராயணசாமி 'பரபர' குற்றச்சாட்டு: வீடியோ

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேட்டி யாரிடமும் எந்த ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: முதல்வரையும் அமைச்சர்களையும் கலந்தாலோசிக்காமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாரயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்து இடாத காரணத்தால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன என அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

Puducherry Lt.general is not discussing with any one and deciding on her own said Narayanasamy

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தார். இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் எந்த ஒரு விஷயத்தையும் முதல்வரிடமும் அமைச்சர்களிடமும் ஆலோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவர் யாரையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதனால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று கூறினார்.

English summary
Puducherry Lt.general is not discussing with any one and deciding on her own said Narayanasamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X