சபாஷ் புதிய தலைமுறை! இருளில் மவுலிவாக்கம் கட்டட இடிப்பை 5டி தொழில் நுட்பத்தில் பளீச்சென காட்டியது!
சென்னை மவுலிவாக்கத்தில் இருளில் தரைமட்டமாக்கப்பட்ட கட்டடத்தை 5 டி தொழில்நுட்பத்தில் பளீச்சென காட்டியது புதிய தலைமுறை டிவி சேனல்.
சென்னை : மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒளிபரப்பப்பட்டது.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டிருந்த 11 அடுக்குமாடிக் கட்டடம் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு இரவு 7 மணியளவில் தகர்க்கப்பட்டது.
சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11 மாடி கட்டடம் தகர்க்கப்பட்ட காட்சி #Moulivakkam #Building #Demolition pic.twitter.com/gvVEcK9IWG
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 2, 2016
பிற்பகல் 3 மணிக்கு இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாலை 5 மணிக்கு கட்டடம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கால தமாமதத்தால் இரவு 7 மணிக்கே கட்டடம் தகர்க்கப்பட்டது. மழைக்காலம் மற்றும் மின்சார துண்டிப்பு ஆகிய காரணங்களால் அப்பகுதியே இருள் சூழ்ந்து கட்டடம் இருக்கும் இடம் தெரியாமல் போனது.

கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் சரிவதை மக்களுக்கு தெளிவாக காட்டி நினைத்த புதிய தலைமுறை தொலைக்காட்சி 5Dதொழில்நுட்பத்துடன் பளீச்சென காட்டியது. இதனால் இருளிலும் கட்டடம் தரைமட்டானதையும் அதிலிருந்து பறவைகள் பறந்ததையும் அப்பகுதி புகைமூட்டம் சூழ்ந்ததையும் தொலைக்காட்சிகளில் நேரடியாக காண முடிந்தது.












Click it and Unblock the Notifications