சென்னை வெள்ளத்திற்கு உதவிய புழல் கைதிகள்- நிதியுதவி அளித்து நெகிழ வைத்தனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வெள்ள நிவாரண பணியில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்ற கைதிகளும் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
நேற்றைய தினம் புழல் 1 ஆவது தண்டனை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரும் இணைந்து ஏறக்குறைய ரூபாய் 70,000 நிதியைத் திரட்டி மூவாயிரம் உணவுப் பொட்டலங்களும், ஆயிரம் பிரெட் பாக்கெட்டுகளும் வடசென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கு அனுப்பியுள்ளார்கள்.

சிறைநிர்வாகம் இதற்கு முதலில் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பின்பு சிறைவாசிகள் அனைவரும் நேற்று மதியம் உணவு மறுப்புப் போராட்டத்தைத் தொடங்கியவுடன் இந்த நிவாரணப் பணிகளுக்கு ஒத்துக்கொண்டுள்ளது.
அதனையடுத்து சிறைவாசிகள் மாலையில் போராட்டத்தை கைவிட்டு இந்த நிவாரணப் பணிகளைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications