ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தில் 28 பேர் போட்டி... இறுதிப்பட்டியல் வெளியீடு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா, சி.மகேந்திரன் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3ம் தேதி தொடங்கி, கடந்த 10ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தேர்தலில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா உட்பட, 50 பேர் மனு தாக்கல் செய்தனர்.கடந்த 11ம் தேதி, வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன; அப்போது, 32 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 18 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களான சண்முகம், சுப்பிரமணியன் மற்றும் சந்திரமோகன், பால்கனகராஜ் ஆகிய நான்கு பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து 28 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடந்து வருகிறது. 28 பேர் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வாக்குப் பதிவு 27ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 30ம் தேதி எண்ணப்பட்டு அன்றையதினமே முடிவு அறிவிக்கப்படும்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications