ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தில் 28 பேர் போட்டி... இறுதிப்பட்டியல் வெளியீடு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா, சி.மகேந்திரன் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3ம் தேதி தொடங்கி, கடந்த 10ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தேர்தலில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா உட்பட, 50 பேர் மனு தாக்கல் செய்தனர்.கடந்த 11ம் தேதி, வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன; அப்போது, 32 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 18 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களான சண்முகம், சுப்பிரமணியன் மற்றும் சந்திரமோகன், பால்கனகராஜ் ஆகிய நான்கு பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து 28 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடந்து வருகிறது. 28 பேர் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வாக்குப் பதிவு 27ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 30ம் தேதி எண்ணப்பட்டு அன்றையதினமே முடிவு அறிவிக்கப்படும்.
-
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications