ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகும்- ஜெயானந்த் பகீர் தகவல்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படும் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையமே உத்தரவிடும் என்று ஜெயானந்த் திவாகரன் பகீர் தகவலை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.
அப்போது ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்தது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்ததை அடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.

வரும் 21-ஆம் தேதி தேர்தல்
இந்நிலையில் ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி, சுயேச்சைகள் என களத்தில் உள்ளனர்.

தினகரனுக்கும் போலீஸ் அனுமதி
அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக என கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. ஆனால் தினகரன் தேர்தல் பிரசாரம் செய்ய போலீஸார் 4 நாள்களாக அனுமதி அளிக்கவில்லை. பின்னர் வியாழக்கிழமை அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தொப்பி கிடைக்கவில்லை
தினகரன் கேட்ட தொப்பி சின்னத்தை சுயேச்சை உறுப்பினர்களும் கேட்டதால் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ரத்தாகிவிடும்
இந்நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையமே ரத்து செய்ய உத்தரவிடும் என்று தெரிவித்துள்ளார். எனினும் இதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications