ஓ.பன்னீர்செல்வத்தின் லாபியை மீறி வேட்பாளரான தேனி பார்த்திபன்
தேனி: அதிமுக சார்பில் தேனி லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர்.பார்த்திபன் அறிவிக்கப் பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கூழையனூரைச் சேர்ந்த ஆர் பார்த்திபனின் தந்தை பெயர் ராசுத்தேவர். தற்போது 51 வயதாகும் பார்த்திபன் பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவி பெயர் நித்யா(41). இவர்களுக்கு ரூபிகா(19), அபிரூபா(18) என்ற இரு மகள்கள் உள்ளனர். .

போடி ஒன்றிய அதிமுக துணை செயலாளர் மற்றும் கூழையனூர் ஊராட்சித் தலைவராக பதவி வகித்த பார்த்திபன் தற்போது அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராக செயல் பட்டு வருகிறார்.
பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த கடந்த 2006-ல் போடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பி.எஸ். லாபியை மீறி..
இத்தொகுதியை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமது மகனுக்கு வாங்கித் தருவதில் மிகவும் மும்முரம் காட்டினார். கடந்த ஓராண்டுகாலமாக இத்தொகுதியை எப்படியாவது மகனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாகவும் இருந்தார். ஆனாலும் ஜெயலலிதா, வாரிசு அரசியலுக்கு இடம் கொடுக்காமல் பார்த்திபனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் தோல்வி அடைந்தால் நிச்சயம் தம் மீதுதான் கோபப்படுவார் என்பது ஓ. பன்னீர்செல்வத்துக்கு தெரியும். இதனால் உள்ளடி வேலைகள் எதுவும் இல்லாமல் பார்த்திபனுக்கு ஓ. பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு கொடுப்பார் என்றே தெரிகிறது. 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் பார்த்திபனுக்கு கை கொடுக்கவில்லை.. 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலாவது கை கொடுக்குமா என பார்ப்போம்












Click it and Unblock the Notifications