புனேவில் செட்டிலாக வீடு வாங்கியிருந்தார் ராகவேந்திரன் கணேசன்: மைத்துனர் தகவல்
சென்னை: பிரஸ்ஸல்ஸில் பலியான ராகவேந்திரன் கணேசன் தனது மனைவியுடன் புனேவில் செட்டிலாக திட்டமிட்டு வீடு வாங்கியதாக அவரது மைத்துனர் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன்(31) பலியானார். அவரது உடல் நேற்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

சென்னையில் பிறந்த அவர் மும்பையில் வளர்ந்தார். மகாராஷ்டிராவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் படித்தார். கல்லூரியில் படிக்கையிலேயே அவருக்கு கேம்பஸ் பிளேஸ்மென்ட் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
கணேசன் நிச்சயம் உயிரோடு தான் இருப்பார். அவரை தவறான இடத்தில் தேடி வருகிறார்கள் என்று கூறிய அவரின் மனைவி வைஷாலி அவரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். இந்நிலையில் இது குறித்து ராகவேந்திரனின் மைத்துனர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
ராகவேந்திரன் தனது மனைவியுடன் புனேவில் செட்டிலாக திட்டமிட்டார். இதற்காக அவர் அங்கு வீடு ஒன்றை வாங்கினார். அவர் பிரஸ்ஸல்ஸ் செல்லும் முன்பு புனேவில் தான் வேலை பார்த்தார் என்றார்.












Click it and Unblock the Notifications