ராகுல் காந்தி கொலை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கா நராயணன் உளறல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து தமிழகத்தில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியில் , ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை குறித்து திருச்சி வேலுசாமியின் பேட்டி வெளியானது
இந்த நிலையில் திருச்சி வேலுச்சாமி காங்கிரஸ்காரர் இல்லை. ஊடகங்கள் அப்படி போடக் கூடாது. போட்டால் அதற்கான நடவடிக்கையை சந்திப்பீர்கள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கா நாராயணன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் ராஜீவ் காந்தி கொலைக்கு பதிலாக ராகுல் காந்தி படுகொலை என வார்த்தை மாற்றி அமைத்துள்ளார்.
ராகுல் காந்தி கொலை என அவர் கிளப்பிய திடீர் புயல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நான் அந்த காங்கிரஸ் கட்சியை சேர்நதவன் இல்லை என்று கூறு நாராயணனுக்கும் அதிகாரம் கொடுத்தது யார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், செய்தி தொடர்பாளர் அமெரிக்கா நராயணனும் வந்து நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று வெடித்தார் வேலுச்சாமி. அமெரிக்கா நாராயணன் அறிக்கைக்கு எதிராக திருச்சி வேலுசாமி வழக்கு தொடுக்க உள்ளாராம்.












Click it and Unblock the Notifications