ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது... சென்னை ஏர்போர்ட்டிலிருந்து 'நாசா'

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கை வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் விக்னேஸ்வரன் இன்று முதல்வராக பதவியேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அதிபர் ராஜபக்சே மற்றும் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற இந்திய மீனவர்களின் விசைப்படகுகளை மீட்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை இருக்கும். மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது தவிர்க்க முடியாதது. நிதி ஆதாரத்தை பெருக்கவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications