தனியார்மயமாக்கலை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
செங்கோட்டை: தனியார் மயமாக்கலை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள்.
தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் டாக்டர் பிபேக் தேப்ராய் கமிட்டியின் பரிந்துரைப்படி மத்திய அரசின் தனியார் மய முயற்சிகளை கண்டித்தும், ரயில்வே மருத்துவமனைகள், ரயில்வே பள்ளிகள் தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்தும், ரயில் பயணிகள் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் வரலாறு காணாத வகையில் உயர்த்தி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதை எதிர்த்தும், 2.5 லட்சம் காலியிடங்களையும், அடுத்து ஏற்படப் போகும் 2 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் சரண்டர் செய்ய வேண்டும் என்ற முடிவை எதிர்த்தும் வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒரு வார காலம் முதல்கட்டமாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த உள்ளனர்.

இது குறித்து தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் அனைத்து பகுதிகளிலும் ரயில்வே ஊழியர்களிடம் போராட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று செங்கோட்டையில் மஸ்தூர் யூனியன் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரை கோட்டத் தலைவர் இராமசுப்பு, கோட்ட செயலாளர் ரபீக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் கோட்ட செயலாளர் ரபீக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசை கண்டித்தும், ரயில்வே போர்டையும் கண்டித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். வரும் செப்டம்பர் 2ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை பிற மத்திய அரசு ஊழியர்கள் நடத்த உள்ளனர். அதற்கு நாங்களும் பெரிய அளவில் ஆதரவு தர உள்ளோம்.
இதற்கொல்லாம் செவி சாய்க்கவில்லை என்றால் வரும் நவம்பர் 23ம் தேதி தென்னகத்தில் பெரிய வேலைநிறுத்த போராட்டம் நடத்துகிறோம். அதற்கு எங்களை தயார் படுத்திட இந்த கூட்டங்களை நடத்தி வருகிறோம். ரயில்வேத் துறையில் மானியங்களுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு பொது பட்ஜெட்டில் கொடுத்தால் ரயில்வேத் துறை லாபத்தில் இயங்கும் என்றார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications