தனியார்மயமாக்கலை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
செங்கோட்டை: தனியார் மயமாக்கலை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள்.
தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் டாக்டர் பிபேக் தேப்ராய் கமிட்டியின் பரிந்துரைப்படி மத்திய அரசின் தனியார் மய முயற்சிகளை கண்டித்தும், ரயில்வே மருத்துவமனைகள், ரயில்வே பள்ளிகள் தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்தும், ரயில் பயணிகள் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் வரலாறு காணாத வகையில் உயர்த்தி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதை எதிர்த்தும், 2.5 லட்சம் காலியிடங்களையும், அடுத்து ஏற்படப் போகும் 2 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் சரண்டர் செய்ய வேண்டும் என்ற முடிவை எதிர்த்தும் வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒரு வார காலம் முதல்கட்டமாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த உள்ளனர்.

இது குறித்து தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் அனைத்து பகுதிகளிலும் ரயில்வே ஊழியர்களிடம் போராட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று செங்கோட்டையில் மஸ்தூர் யூனியன் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரை கோட்டத் தலைவர் இராமசுப்பு, கோட்ட செயலாளர் ரபீக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் கோட்ட செயலாளர் ரபீக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசை கண்டித்தும், ரயில்வே போர்டையும் கண்டித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். வரும் செப்டம்பர் 2ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை பிற மத்திய அரசு ஊழியர்கள் நடத்த உள்ளனர். அதற்கு நாங்களும் பெரிய அளவில் ஆதரவு தர உள்ளோம்.
இதற்கொல்லாம் செவி சாய்க்கவில்லை என்றால் வரும் நவம்பர் 23ம் தேதி தென்னகத்தில் பெரிய வேலைநிறுத்த போராட்டம் நடத்துகிறோம். அதற்கு எங்களை தயார் படுத்திட இந்த கூட்டங்களை நடத்தி வருகிறோம். ரயில்வேத் துறையில் மானியங்களுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு பொது பட்ஜெட்டில் கொடுத்தால் ரயில்வேத் துறை லாபத்தில் இயங்கும் என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications