ரயில்களில் தூங்கும் நேரத்தை குறைக்கும் நிர்வாகம்... முன்பதிவு பெட்டிகளை அதிகரித்தால் என்ன?
ரயில்களில் தூங்கும் நேரத்தை குறைக்கும் ரயில்வே நிர்வாகம், முன்பதிவு பெட்டிகளை அதிகரித்தால் பயனுள்ளதாகமே இருக்குமே என்கின்றனர் பயணிகள்.
சென்னை: ரயில்களில் உட்காருவதற்கு இடப்படும் சண்டையை தவிர்க்க முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் தூங்கும் நேரத்தை குறைக்கும் ரயில்வே நிர்வாகம் கூடுதலாக முன்பதிவு பெட்டிகளை இயக்கினால் என்ன தவறு என்கின்றனர் பயணிகள்.
நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள், பேருந்துகளை காட்டிலும் ரயில் பயணங்களையே விரும்புவர். அப்போதுதான் அலுப்பு தெரியாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இரவு முழுவதும் தூங்கிக் கொண்டு செல்லலாம் என்பதால் ரயில்களில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பார்ப்பதற்கு ஈஸி பயணமாக காட்சியளித்தாலும் முன்பதிவு பெட்டிகளில் முண்டியடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுகளையும், குழந்தை குட்டிகளையும் பிடித்துக் கொண்டு ஏறுவதுதான் கொடுமையிலும் கொடுமை. இதை பெரும்பாலானோர் அனுபவித்து இருப்பர்.

சீசன் நாள்களில்...
சாதாரண நாள்களில் கூட பரவாயில்லை ஆனால் விடுமுறை நாள்களிலும், சீசன் நாள்களிலும் சொல்லவே வேண்டாம். குறிப்பிட்ட ஒரு ரயிலானது அந்த ரயில் நிலையத்தை காலை 7 மணிக்கு வந்தடையும் என்று வைத்துக் கொண்டால், அதில் முன்பதிவில் இடம் பிடிக்க பயணிகள் காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருப்பர்.

ரயில்வே போலீஸ்
ரயில் வந்தவுடன் இன்னும் கூட்டம் முண்டியடிக்கும் என்பதால் ரயில்வே போலீஸார் அந்த இடத்துக்கு வந்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி ரயிலில் ஏற்றிவிடுவர். அதிலும் இடம் பிடிப்பதில் பெரிய சண்டை நடக்கும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பெர்த்துகளில் சிலர் பயணம் தூரம் முழுவதும் தூங்கிக் கொண்டே வருவர்.

அடிக்கடி சண்டை
பயணிகள் பெர்த்துகளில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அந்த பெர்த்துகளில் பயணிகள் அமர்ந்து கொண்டு பயணம் செய்வர். இதை சிலர் அனுமதித்தாலும், பெரும்பாலானோர் அடாவடியாக எந்நேரமும் தூங்கிக் கொண்டே வருவர். இதனால் அங்கு பெரிய பஞ்சாயத்தே நடக்கும்.

தூங்கும் நேரத்தை குறைத்தல்
இதனால் யோசித்த ரயில்வே நிர்வாகம் இந்த சண்டை சச்சரவுகளை போக்க ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் தூங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்துவிட்டது. அதாவது இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைதான் தூங்கும் நேரம். இது பயணிகளுக்கு ஒன்றும் பயனளிக்க போவதில்லை. அடாவடி அடிப்பவர்கள் அடிக்கத்தான் செய்வர்.

பயணிகளைத்தான் கஷ்டப்படுத்தனுமா?
பெர்த்துகளை முன்பதிவு செய்ய ரயில்வே நிர்வாகம் எப்போது அறிவிக்கும் என்று கண் கொட்டாமல் பார்த்து அறிவுத்தவுடன் டப டபவென பதிவு செய்து அது கன்பார்ம் ஆகுமோ இல்லையோ என்ற கவலையில் இருந்து ஏதோ கடைசி நேரத்தில் கன்பார்ம் ஆகும். அந்த சந்தோஷத்தில் சென்றால் ரயிலில் இடம் பிடிக்க பெரிய அதகளமாகிறது.

ரயில் பெட்டியை கூட்டினார் என்ன ?
ரயிலில் கூட்டத்தை குறைக்க அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்பதற்கு பதிலாக முண்டியடித்து ஏறுவதை தடுக்கும் வகையில் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளை கூட்டினால் என்ன. முண்டியடித்து போனாலும் ஒரே காசுதான். அதற்கு மக்களுக்கு பயன்படும் வகையில் அவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் முன்பதிவு பெட்டிகளை அதிகரித்தால் நன்றாக இருக்குமே. நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் ரயில்வேக்கும் வருவாய் கிடைக்கும். எல்லாவற்றையும் பயணிகள் தலையில் திணிக்காமல் பயணிகளின் நலனில் ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications