For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெடுவாசல், கோட்டைக்காட்டில் கொட்டும் மழையில் அனல் பறக்கும் போராட்டம்

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் 16வது நாளாக மக்கள் கொட்டு மழையில் போராடி வருகின்றனர். கோட்டைக்காடு பகுதியில் 6வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

கோட்டைக்காடு கிராமத்திலும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது 6வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். மழை வெள்ளம் வந்தாலும் எழுந்து செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் நிறுத்தும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். உயிரோ போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

நெடுவாசல்

நெடுவாசல்

எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்காக ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தியா முழுக்க 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமமும் ஒன்று. இதைத் தொடர்ந்து நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கிராம மக்கள் எதிர்ப்பு

கிராம மக்கள் எதிர்ப்பு

ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நெடுவாசல் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வருடன் பேச்சு

முதல்வருடன் பேச்சு

நெடுவாசல் போராட்ட குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்காது என முதல்வர் உறுதியளித்தார். எனினும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

கொட்டும் மழையில்

கொட்டும் மழையில்

காலை முதலே நெடுவாசல், கோட்டைக்காடு பகுதியில் மழை பெய்து வருகிறது. மழையிலும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். மழையோ, வெயிலோ எதுவும் எங்களை செய்யாது என்று கூறி போராடி வருகின்றனர். கிராம மக்கள், மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

நெடுவாசல் 16வது நாள்

நெடுவாசல் 16வது நாள்

நெடுவாசலில் 16வது நாளாக உறுதியுடன் போராடி வரும் மக்கள், எங்களின் உயிரைக் கொடுத்தாவது இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கிராம நிர்வாகிகளின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் கூறியுள்ளனர்.

கோட்டைக்காடு 6வது நாள்

கோட்டைக்காடு 6வது நாள்

கோட்டைக்காடு கிராமத்திலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மழையைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைக்காடு கிராமத்தில் 6வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அடாது மழை பெய்தாலும் விடாது போராடுவோம் என்று கூறி குடையை பிடித்துக்கொண்டு மக்கள் போராடி வருகின்றனர்.

English summary
Heavy rain is lashing Neduvasal and Kottaikadu and it has failed to to stop the people's spirit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X