சென்னையில் மழை... 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னையின் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை தாம்பரம், கிண்டி, பட்டினப்பாக்கம் , மயிலாப்பூர், மந்தைவெளி, பொன்னேரி, பெரியபாளையம் திருவெற்றியூர், மணலி மற்றும் எண்ணூர் பகுதிகளில் மழைபெய்து வருகிறது.
அடுத்த மூன்று நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications