திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை.. சென்னையில் வெறும் கருமேகம் மட்டுமே!
சென்னை: சென்னையில் இன்று மாலையில் பலத்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்ததால் பலத்த மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் இடி காற்று மற்றும் லேசான தூறலுடன் மழை போய் விட்டது.
அதேசமயம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. கத்திரி வெயில் முடிந்து விட்டபோதிலும் வெயில் தொடர்ந்து கொளுத்துவதால் மக்களின் புழுக்கம் குறையாமலேயே உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர் காற்றும் வீசத் தொடங்கியது. வானம் கருத்துக் காணப்பட்டதால் கன மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். சென்னை நகரிலும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றும் வீசியது.
இருப்பினும் வெறும் இடி, பலத்த காற்று மற்றும் லேசான தூறலுடன் பெரிய மழை வராமல் மக்களை ஏமாற்றி விட்டது. இருப்பினும் இந்த திடீர் மாற்றத்தால் வெட்கை தணிந்து குளுமை குடியேறியது.
இதற்கிடையே, திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து அப்பகுதி மக்களை குளிர்வித்தது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications