சென்னை, பெங்களூரில் இன்றும் தொடரும் கன மழை
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரு நாட்களாகவே மழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் நேற்று மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்றும் மதியம் மழை பெய்தது. கோடம்பாக்கம், அரும்பாக்கம், சாலிகிராமம், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டியது.

பெங்களூரை பொறுத்தளவில் நேற்று முன்தினம் அதிகாலையை போலவே, இன்று அதிகாலையும் கன மழை பெய்தது. இன்று மதியம் ஆரம்பித்த மழை மாலை வரை தொடருகிறது.

எலக்ட்ரானிக்சிட்டி, பொம்மனஹள்ளி, பேகூர், ஹெச்எஸ்ஆர் லேஅவுட், மடிவாளா, கோரமங்களா, ஜெயநகர் உள்ளிட்ட தெற்கு பெங்களூரில் அதிக அளவுக்கு மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications