தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தகவல் தெரியவந்துள்ளது. சென்னையில் நேற்று 36.2 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
கடலோர மாவட்டங்களில் மேற்கு, தென்மேற்கு திசையில் 45-55 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரையில் கனமழை:
மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று மாலை பல இடங்களில் மழை பெய்தது. பெரியார் பஸ் நிலையம், காளவாசல், ஆரப்பாளையம், பழங்காநத்தம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா பேருந்துநிலையம், நாகமலை புதுக்கோட்டை, காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.












Click it and Unblock the Notifications